சவாசனம் : அற்புதபரிகாரம்

லக்னாதிபதி 6- 8- 12 ல் இருப்பதை வைத்து நானே பலமுறை திகில் படம் காட்டியிருக்கன். அப்ப சொன்னதெல்லாமும் நெஜம் தான். இப்ப சொல்லப்போறதும் நெஜம் தான்.

ஆருனா போதிய தகுதி இல்லாம அங்கீகாரத்துக்கு அலைஞ்சு பறை சாத்தி ஒரே மாதிரி முயற்சிகளை செய்றாய்ங்கன்னு வைங்க. அப்பம் “ஓட்டை சட்டிய வச்சுக்கிட்டு போட்ட தாளத்தை போடாதே”ம்பாய்ங்க.

சட்டின்னாலே அது “கடம்” தான். தாளம் போடத்தான்னு நினைச்சுர்ரம். அல்லது பானைன்னதுமே அதை தண்ணி ஸ்டாக் பண்ணத்தான்னு நினைச்சுர்ரம்.
அதனால ஓட்டை சட்டின்னு கேவலப்படுத்திர்ரம். இதுவே அந்த ஓட்டை சட்டியை வச்சுக்கிட்டு உபயோகமா என்ன பண்ணலாம்னு ஸ்கெட்ச் பண்ணா எத்தனையோ வகையில யூஸ் பண்ணலாம். இந்த நொடி ஸ்பார்க் ஆறதை மட்டும் இங்கன சொல்றன். உங்களுக்கு எதுனா ஸ்பார்க் ஆனா கமெண்ட்ல சொல்லுங்க.
சொட்டு நீர் பாசனத்துக்கு யூஸ் பண்ணலாம். செடி வைக்கலாம் (புதுசா ஓட்டை போடற வேலை மிச்சம்) ஒரு ஆளையே மூளை ரீதியில தீர்த்துக்கட்டிரலாம் , ஒன்னுமில்லை ஒரு ஆளை அசைய முடியாம லாக் பண்ணிட்டு அவன் தலை மேல சொட்டு சொட்டு தண்ணி விழறாப்ல செய்தா போதுமாம். ஒரே நாள்ள மென்டலாயிருமாம்.

ஆக லக்னாதிபதி 6 ல இருக்காரா -எட்டுல கீறாரா – 12 ல லாக் ஆயிட்டாராங்கறது பிரச்சினையே இல்லை. அந்த சிச்சுவேஷனை நீங்க எப்படி டாக்கிள் பண்றிங்கங்கறதுதான் முக்கியம்.

இந்த சீரிஸ்ல ஜோதிடம் முற்றிலும் புதிய கோணம் தொடர் வரிசையில சில விஷயங்களை சொல்லலாம்னு இருக்கன்.
லக்னாதிபதி எட்டில் இருந்தால் கெட்டது குடின்னு நானே சொல்லியிருக்கன். ஆனால் கொஞ்சம் டீப்பா ரோசிங்க. எட்டுங்கறது மரணத்தை காட்டும் இடம். ஜாதகர் மரணத்தை பத்தி யோசிக்க ஆரம்பிச்சுட்டா என்ன ஆகும்? அவரோட வாழ்க்கை சூப்பர் டூப்பர் சக்ஸஸ் ஆகும்.

ஆனால் நம்மாளுங்க நார்மல் பர்சன்ஸுக்காக வச்ச ரூல்ஸை எல்லாம் இவிகளும் ஃபாலோ பண்ணா தான் பிரச்சினை. உதாரணமா அறச்சொல் பேசக்கூடாதுன்னு ஒரு மேட்டர்( அபசகுனமா பேசறது -சாவு -என் கருமாதிக்கு வா).

ஆரோ பாடகர் ” கையில வாங்கினேன் பையில போடல”ன்னு பாடினாராம். பர்ஸ் போச்சு. டி.எம்.எஸ் ” நான் ஒரு ராசியில்லா ராஜா”ன்னு பாடினார். மார்க்கெட் போச். கண்ணதாசன்”ஊமை என்றால் அதில் ஒரு அமைதி”ன்னு எளுதினாரு.அதான் அவரோட கடைசி பாட்டு. இப்படி நிறைய டேட்டா இருக்கு. இல்லேங்கல. ஆனால் இதை லக்னாதிபதி எட்டுல உள்ளவுக ஃபாலோ பண்ணப்படாது.

இதுக்கு பரிகாரமா மரண கானா பாட்டு கேட்க சொல்றேன்.ஏன்னா அப்படியாச்சும் மரணத்தை பத்தி சிந்திக்கனும்னுதேன்.

“சவாசனம் “பண்ண சொல்றேன். உங்கபாடிய கொண்டு சுடுகாட்ல வைக்கிறாய்ங்க. கட்டை அடுக்கறாய்ங்க. நெருப்பு வைக்கிறாய்ங்கன்னு இமேஜின் பண்ண சொல்றேன்.
இப்படி செய்யும் போது ப்ரக்ஞை உடலை கடக்குது. ஆக்சிடென்டலாம் ஞானமே கூட பெறலாம்.ஆனால் லக்னாதிபதி எட்டில் என்ற தோஷத்துக்கு பரிகாரம் மட்டும் கியாரன்டி.ஆனால் எத்தனை பேர் ஃபாலோ பண்ணி சக்ஸஸ் ஆனாய்ங்கன்னு தெரீல.

இதுமட்டுமில்லை சொந்த பந்தம்,நட்பு வட்டத்துல சாவு விழுந்தா போய் கலந்துக்கங்க.சுடுகாடு வரை போய் வாங்கன்னு சொல்றேன்.
ஆராச்சும் அனாதை பிணங்களுக்கு சம்ஸ்காரம் பண்ற வேலைய சேவையா செய்துக்கிட்டிருந்தா அவிகளுக்கு கான்ட் ரிப்யூட் பண்ணுங்க.
விட்டா உங்கள மாதிரியே லக்னாதிபதி எட்டுல கேஸுங்களை தேடிப்பிடிச்சு ஒரு மார்ச்சுவரி வேன் ரன் பண்ணுங்க. ஏழைக்கு இலவசம்னு வைங்க.
உங்க ஏரியா கவர்மென்டு ஆஸ்பத்திரிக்கு போயி ஏழை பாழைங்க கிட்டே மார்ச்சுவரில லஞ்சம் வாங்காதிங்கடா – நாங்க வேணா காசு கொடுக்கறோம்னு செட்டில்மென்ட் பண்ணிக்கங்க. நான் கோடு போட்டுவிட்டேன். நீங்க ரோடு போடுங்க. அப்பால லக்னாதிபதி எட்டுல உட்கார்ந்து என்ன செய்யமுடியும்?
சரிங்ணா நாளைக்கு (அதாவது அடுத்த பதிவுல ) லக்னாதிபதி ஆறுல இருக்கிறதை எப்படி டேக்கிள் பண்ணலாம்னு சொல்றேன்.

குறிப்பு:
லக்னாதிபதி எட்டுக்குரியவரோடு சேர்ந்தாலும்,அவர் இவரை பார்த்தாலும் -இவர் அவரை பார்த்தாலும் கும்பம்,மகரம் தவிர்த்த மத்த லக்னக்காரவுகளுக்கு லக்னாதிபதியோட சனி சேர்ந்தாலோ இந்த மேட்டரை ஃபாலோ பண்ணுங்க.