கூகுள் முன்னாள் ஊழியர் தீவிரவாதியா?

2

உலகப்புகழ் பெற்ற ஐ.டி நிறுவனமான கூகுள் முன்னாள் ஊழியர் சல்மான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த சில காலமாக ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு. ஹைதராபாதில் கூகுள் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ள இவர் முஷீராபாதை சேர்ந்தவர்.

இவர் மீது சந்தேகம் வலுத்ததால் இவரது சமூக வலைதள செயல்பாடுகளை கண்காணித்த போலீசார் இவரை கைது செய்துள்ளனர். இஸ்லாமிக் ஸ்டேட் நிர்மாணமே நோக்கமாய் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ யில் சேர முயன்றதாகவும் மேலும் சிலரை மேற்படி தீவிரவாத குழுவுக்கு அறிமுகப்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

போலீசார் இவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.ஏற்கெனவே மகாராஷ்டிரத்தில் இருந்து ஹைதராபாத் வந்து தீவிரவாத பயிற்சியில் ஈடுபட்டிருந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.