தொடை அழகும் சொத்து சுகமும்

அண்ணே வணக்கம்ணே !
எதை எழுதலாம்னு ஆரம்பிச்சாலும் ஏற்கெனவே சொன்னாப்லயே இருக்கு. அப்பாறம் அரைச்ச மாவை அரைக்கிறான்னுருவிங்க. கணிணி புழக்கத்தால ஞா சக்தி வேற பஜ்னு ஆயிருச்சு. சரி சரி மேட்டருக்கு வந்துர்ரன்.

சாமுத்ரிகாலட்சணம்னு ஒரு சப்ஜெக்டு இருக்கு. ஒருத்தன்/ஒருத்தி எந்தளவுக்கு அளகா இருந்தா அந்தளவுக்கு அதிர்ஷ்டசாலின்னு சொல்லுது. இதுல தொடை அழகும் சேர்த்தி. அழகுக்கும் அதிர்ஷ்டத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக சொல்றேன்.

லக்னம்: தலை,முகம் ,இரண்டாமிடம் வாய் ,கழுத்து ,கண்களை காட்டுது. இப்படியே இறங்கிப்போனா எட்டாமிடம் பலான இடத்தை காட்டுது. ஒன்பதாமிடம்? தொடை .

இந்த ஒன்பதாமிடம் தான் அப்பா,அப்பாவழி உறவு, சொத்து ,முதலீடு,சேமிப்பு,தூர தேச தொடர்பு,புக்,வெப் பப்ளிஷிங் எல்லாத்தையும் காட்டுது. ஜாதகத்துல இந்த 9 ஆமிடம் சுப பலமா இருந்தா தொடையழகு சூப்பரோ சூப்பரா இருக்கும். மேலே சொன்ன விஷயங்களும் அனுகூலமா இருக்கும்.
ஆனா ஆண்கள் பெண்களின் தொடைய ரசிக்கிறதுல மட்டும் ரெண்டுவிதமான கருத்து இருக்கு.( நமக்கு) ஒன்னு அம்மாவுக்கு பிறவு இவ மடியில கண்ணசரலாம்ங்கற எண்ணம். அடுத்தது ..

வேற ஒரு சின்ன மேட்டரை சொல்லிட்டு இதையும் சொல்லிர்ரன். நமக்காகவே -அதாவது உங்களுக்காகவே ஒரு வலைதளம் ஆரம்பிச்சிருக்கேன்.
இதனோட உள்ளடக்கம் ……..ஒரு வரியில சொன்னா உங்களுக்கு பிடிச்ச வலைதளங்களை பற்றிய குறிப்புகள் .இந்த குறிப்புகளையும் நீங்களே தான் தரப்போறிங்க. முழு விவரத்துக்கு இங்கே அழுத்துங்க.

இப்போ பலான மேட்டருக்கு வந்துருவம். ஆண்கள் பெண் தொடையை ரசிக்கிறார்கள்னா அதுக்கான இன்னொரு காரணம் ..ஹ்ம்.. சொல்லிரலாமா? வேணாம் .. வேணாங்ண்ணா ரெம்ப ஏ வா போகும். ஆளை விடுங்க.
ஸ்..அப்பாடா எப்படியோ கவர்ச்சியான தலைப்பையும் கொடுத்து தலைப்புல உள்ள தொடையை ஜஸ்டிஃபையும் செய்துட்டம். இன்னைக்கு பாக்யாதிபதி எந்த எந்த பாவங்களில் நின்னா என்ன பலன்னு பார்ப்போம்.
1.லக்னத்தில்:
இவர் நைசர்கிக சுபரா-லக்னாத் சுபரா இருந்தா அப்பாவோட நல்ல குணங்கள் ஜாதகரில் ஏற்படும். அப்பா -பிள்ளை உறவு பெட்டரா இருக்கும். சின்ன வயசுலருந்தே சிக்கனம்,சேமிப்பு,மணி மேனேஜ்மென்ட்ல ஆர்வம், தூர தேசங்களை பற்றி தெரிந்து கொள்ளும் விருப்பம் இருக்கும்.எழுத்தாளரா கூட ஆகலாம். வெளி நாடு சென்று பொருளீட்ட வாய்ப்பு.
2.தனபாவம்:
பண விஷயத்துல அப்பாவை சார்ந்திருக்கலாம். அப்பா வழி சொத்துக்களை “அனுபவித்து”விடலாம். அப்பாவோட பஞ்ச் டயலாக்ஸை மிமிக்ரி பண்ணலாம் அ ரிப்பீட் பண்ணலாம்.அப்பா வீட்டோடு தொழில் செய்பவராக அ வீட்டோடு இருப்பவராக மாறலாம்.
3.சகோதர பாவம்:
அப்பா வேறிடம் -ஜாதகர் வேறிடத்தில் வசிக்கலாம். சந்திப்புக்காக பயணங்கள் தொடரலாம். அப்பா தில்லு துரையா இருக்கலாம். ஜாதகர் வெளி நாட்டு சங்கீதங்களை ரசிக்கலாம். சொத்து,முதலீடு,சேமிப்பு மேட்டர்ல அல்லல் அலைச்சல் நஷ்டம் ஏற்படலாம்.
4.மாத்ருபாவம்:
அப்பா கொஞ்சம் ஃபெமிலிஷா இருக்கலாம். ஹி மே பீ தி ஹோம் மேக்கர். அம்மா கமாண்டர் ஆஃப் தி ஃபேமிலியா இருக்கலாம். ஆனால் ஜாதகர் இதயத்துல அப்பாவுக்கு பிரத்யேகமான இடம் நிச்சயம்.ஜாதகருக்கு அம்மா,அம்மா வழி உறவுகளால் வீடு,நிலம்,சொத்து சுகம் ஏற்படலாம்.கல்வியே செல்வமா மாறும். ஜாதகர் போக்கு வரத்து, டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் துறையில முன்னேறலாம்.
5.புத்ரபாவம்:
அப்பா ஜாடையில பிள்ளை பிறக்கும். சிலருக்கு அப்பா இறந்த அதே வருடம். ஜாதகரின் பூர்வ ஜென்ம பாப புண்ணியங்களுக்கான பலன் எல்லாம் அப்பா மூலமாகவே கிடைக்கும். தூர தேசங்களில் இருந்து உதவி கிடைக்கும்( கணிதமேதை ராமானுஜத்துக்கு கிடைச்சாப்ல) அப்பா வழி சொத்துக்கள் கிடைக்கும். ஜாதகர் தம் புத்தி பலத்தால் இன்னும் சொத்து சேர்ப்பார். செட்டாக வாழ்வார்,தர்ம காரியங்களும் செய்வார். புத்தக வெளியீட்டில் சாதனை படைக்கலாம். ஸ்தூல பூஜைகளை விட மனோ பூஜைக்கு அதி முக்கியத்துவம் தருவார்.
6.ரோகபாவம்:
இங்கு பாக்யாதிபதி நின்றால் அப்பா நோய்,கடன்,வழக்கு,எதிரிகளால் பாதிக்கப்படுவார். அல்லது ஜாதகருக்கு அப்பாவுடன் விரோதம் ஏற்படும். சொத்துக்கள்,முதலீடு,சேமிப்புகள் மீது வில்லங்கம் ஏற்படும்.சிலர் கடன் வாங்கி சொத்து வாங்குவர். மெடிக்கல் ரீ இம்பர்ஸ்மென்ட் கிடைக்கும். தூர தேச தொடர்புகளால் கடன் ஏற்படும். ஓடாத பத்திரிக்கைய நடத்தறவுகல்லாம் இந்த கேட்டகிரிதான்.
7.களத்ர பாவம்:
இங்கு பாக்கியாதிபதி நின்றால் அப்பாவுடன் நல்ல தோழமை ஏற்படும். அப்பா வழி உறவில் மனைவி அமைவார். மனைவி வழியில் சொத்து கிடைக்கும். வெளி நாடு செல்வார். என்னடா வில்லங்கம்னா அங்கன ஒரு கிராக்கி மாட்டிக்கலாம். பார்ட்னர்ஷிப்ல முதலீடு சேமிப்பு தொடர்பான தொழில் செய்யலாம். தம்பதி சமேதரா தீர்த்தயாத்திரை போவார்.
8.ஆயுள்பாவம்:
இங்கு பாக்கியாதிபதி நின்றால் அப்பாவுக்கு கெண்டம்,அவர் மறைந்து வாழ வேண்டி வரலாம்,சிறை செல்லலாம்,ஜாதகரை பிரியலாம். ஜாதகர் கொலைத்தொழிலுக்கும் துணியலாம். ( சிக்கன் சென்டர்?) .தூர தேச பயணம் செல்கையில் விபத்து நேரலாம் அல்லது வெளி நாட்டில் உயிர் பிரியலாம். ஒரு மரணத்தால் ஜாதகர் தம் சொத்து,முதலீடு ,சேமிப்பு அனைத்தையும் இழக்க வேண்டி வரலாம். சகட்டு மேனிக்கு எழுதி கிளிச்சு செயிலுக்கு போற பார்ட்டியெல்லாம் இந்த கேட்டகிரி .
9.பாக்யபாவம்:
பாக்கியாதிபதி பாக்யபாவத்துலயே ஆட்சி பெற்றால் அப்பாவுக்கு நெல்லது. அவர் முன்னேற்றம் வேகம் பெறும். ஜாதகருக்கு பூர்விக சொத்து கிடைக்கும் . சேமிப்பு ,முதலீடுகளி ஆர்வம்,அனுகூலம் இருக்கும்.ஆனால் ஜாதகரின் ஜாதகத்தில் லக்னாதிபதி உச்சம் பெறாவிட்டால் அப்பா கோண்டுவாகி பெண்டாட்டிக்கும் -அப்பாவுக்கும் மத்தியில மாட்டி முளிக்கனும். கிட்னி வித்து வெளி நாடு போறதெல்லாம் இந்த கேட்டகிரிதான்.ஜாதகர் பப்ளிஷிங்,வெப் பப்ளிஷிங்ல பெயர் பெறுவார். ( உத்யோகஸ்தராவே முடிஞ்சுருவாரு)
10.ஜீவனபாவம்:
சுற்றுலா, சிறு சேமிப்பு துறை, வருவாய்த்துறை, செய்தி மக்கள் தொடர்பு அல்லது அற நிலைய துறைகளில் வேலை செய்யலாம். தொண்டு நிறுவனம் துவங்கி செயல்படலாம். ஃபுல் டைம் ஆன்மீக ,மத பிரச்சாரம் .ஜனக மகரிஷி போல இக,பர சுகங்களுக்கு மினிமம் கியாரண்டி உண்டு.
11.லாப பாவம்:
அப்பாவின் அன்போடு ,ஒரு காட் ஃபாதர் அல்லது ஃபாதர்லி பர்சனோட அன்பு ஆதரவு கிடைக்கும். சகோதர நஷ்டத்தால் அல்லது அவர் வேண்டாம் என்று சொல்லிவிடுவதால் பூர்விக சொத்து உபரியாகவே கிடைக்கலாம்.மூத்த சகோதரர் தந்தை ஸ்தானத்தில் இருந்து ஜாதகரை சம்ரட்சிப்பார்.
12.விரயபாவம்:
பூர்விக சொத்துக்கள் இரா. இருந்தாலும் வீண் விரயமாகிவிடும். அப்பா ? இருந்தாலும் இல்லாதது போலத்தான். ஓடிப்போன சிட் ஃபண்ட் முதலாளிகளிடம் பணம் போட்டவர்கள் இந்த கேட்டகிரிதான். சிவில் வழக்குகளுக்காக கோர்ட்டில் குடித்தனம் இருப்பவர்களும் இவர்களே. பொஞ்சாதி தாலிய அடகு வச்சு கவிதை தொகுப்பு போட்டு தெரிஞ்சவுகளுக்கு ஓசியில கொடுக்கிறவுகளும் இவிகதான்.