உங்களுக்கும் ராஜயோகம் :25

RSS

அண்ணே வணக்கம்ணே !
குரு பலம் இல்லாதவிக ராஜயோகம் பெற என்ன செய்யலாம்ங்கறதை இந்த பதிவுல சொல்லோனம். அல்லாரும் -ஐ மீன் ஜோசியர்கள் எந்த கிரகம் செரியில்லின்னா அந்த கிரகத்துக்குரிய கடவுள் பேர சொல்லி ச்சூ காட்டி விட்டுர்ராய்ங்க. சனம் “கோயிலுக்கு போ -சாமி கும்பிடு வந்துரு”ன்னு சொன்னதை திராட்டுல விட்டுட்டு கோயில்லயே குடித்தனம் பண்ண ஆரம்பிச்சுர்ராய்ங்க. ஆனால் கோயில்-குளம்னு போகனும்னா கூட உங்க ஜாதகத்துல குரு பலம் இருக்கோனம்.

குரு பலம் இல்லாம கோவில் குளம்னு அலப்பறை கொடுத்தா ஆப்புதேன். கோவில்களை 3 க்ரூப்பா பிரிக்கலாம்.

1.மாடர்ன் டெம்பிள்ஸ்
இதெல்லாம் ச்சும்மா பிக்னிக் ஸ்பாட் மாதிரி-போகலாம் -போன மாதிரியே வந்துரலாம் ( ஆனா இங்கே போனாலும் சிம்னி போடாத லாந்தர் விளக்கு போல படபடன்னு அடிச்சுக்கிட்டிருக்கிற குருபலம் செலவழியும்) இதுல ஒரு ஆறுதல் என்னடான்னா இந்த மாடர்ன் டெம்பிள்ஸ் மேல உங்களுக்கு ஏற்படற கவர்ச்சி இத்யாதில்லாம் மேம்போக்கானது .கே டிவியில நல்ல படம் போட்டுட்டான்னா கோவிலுக்கு போறது கேன்சலாயிரும்.

2.மாடர்னைஸ்ட் டெம்பிள்ஸ்
ஒரு காலத்துல சாஸ்த்ரோக்தமா இருந்து மாடர்னைஸ் பண்ணப்பட்ட டெம்பிள்ஸ்ங்கறதை சுருக்கமா சொன்னேன். இங்கே போனாலும் குரு பலம் செலவழியும். அதே நேரத்துல உங்க கான்ஷியஸ் மைன்டை தாண்டி சப் கான்ஷியஸ் லெவலுக்கு கூட உங்களை இதெல்லாம் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணாது .
அதே நேரம் ஒரு கவர்ச்சி ஏற்பட்டுரும். வாழ்ந்து கெட்டவன் /அட ராசபரம்பரையில வந்த கடேசி வாரிசோட அரண்மனைக்கு ஒரு தபா போறிங்கன்னு வச்சுக்கங்களேன். அதே எஃபெக்டுதான்.

3.கைவிடப்பட்ட புராதன கோவில்கள்:
கூடங்குளம் அணு உலையிருக்கு. திடீர்னு ஒரு விபத்தே போல சித்தூர் முருகேசன் (ஹி ஹி நான் தேன் பாஸ்) டைரக்ட் எலீக்சன்ல பிரதமர் ஆயிட்டேன்னு வைங்க. அட போங்கடா உசுரோட இருந்தா உப்பு வித்து பொளைச்சுக்கலாம். உசுரே போயிரும்னா அந்த கருமாந்திரம் எதுக்கு மூடித்தொலைன்னு சட்டம் போட்டுட்டேன்னு வைங்க. இதே நிலை தான் கைவிடப்பட்ட புராதன கோவில்களுக்கு .

அது ரன்னிங்குல இருந்தப்போ சாலக்கா மின்சார உற்பத்தி செய்திருக்கலாம்.ஊருக்கு வெளிச்சம் கொடுத்திருக்கலாம்.ஆனால் இப்போ? உற்பத்தி நடக்கவே இல்லின்னாலும் பரவால்ல. எக்கு தப்பா கூகுள் காரன் விட்ட ட்ரைவர் இல்லாத கார் கணக்கா ஏதோ நடக்குதுன்னு வைங்க.
இதான் ஹை ரிஸ்க்.

ஓஷோ சொல்வாரு.கொய்யால ..வேணம்னா நீ கடவுளா மாறலாம்.ஆனால் கடவுளை பார்க்க மிடியாது.

கோவிலுக்குள்ள “ஏதோ” இருந்தா உள்ளே போன நீங்க பழைய ஆளா நீங்க ரிட்டர்ன் ஆக முடியாது. உங்களுக்குள்ள என்னமோ நடந்துரும். உள்ளே போன ஆள் வெளியே வந்த ஆளை போல இருக்கவே மிடியாது .

விக்கிரக வழிபாட்டை பத்தி ஓஷோ சொல்வார் “இது தப்பான வார்த்தை. விக்கிரகம் இருக்கும் வரை அங்கே வழிபாடு நிகழாது. வழிபாடு துவங்கி விட்டால் அங்கே விக்கிரகம் இருக்காது”

இதெல்லாம் தத்துவார்த்தமா பார்த்தா ஓகே தான். ஆனால் லாஜிக்கலா பார்த்திங்கன்னா கோவிலோ -உள்ளாற இருக்கிற விக்கிரகமோ ஸ்தூல பொருள் தான். ஏதோ ஒரு டெக்னாலஜியை உபயோகிச்சு அதை உயிரோட்டமுள்ளதா மாத்தியிருக்காய்ங்க.

உங்களுக்கு புரியனும்னா சிம்பிளா சொல்றேன். விக்கிரகம் ஒரு ரீசார்ஜபிள் பேட்டரி – அதை தொடர்ந்து சார்ஜ் பண்ணிக்கிட்டே இருக்கோனம். ப்ளஸ் -மைனஸ் மாறப்படாது.பேட்டரி கெப்பாசிட்டிய பொருத்து சார்ஜ் இருக்கனும். ஷார்ட் ஆகப்படாது .

இதெல்லாம் ஒர்க் அவுட் ஆற வரை ஓகே. இதுல எதுனா ஒன்னு பிடுங்கிக்கிட்டா என்னாகும்? பேட்டரி நில் ஆயிரும்.
நில்லான பேட்டரி என்ன செய்யும்? சார்ஜ் ஆகவே பார்க்கும். ஏதோ கிடைக்கும்னு போன மகாசனங்களோட பேட்டரியை அவுட்டாக்கி அது சார்ஜ் ஆக ஆரம்பிச்சிரும்.

(ஏம்பா நான் செரியா பேசறனா?)

குருபலம் இல்லாத ஹ்யூமன் பாடி லோ சார்ஜ்ல உள்ள பேட்டரி மாதிரி – நில் பேட்டரி பக்கத்துல போனா பேட்டரி காலியாயிரும்.
குருபலம் இல்லாதவிக கதையே இதான். ஒரு வேளை குருவோட ராகு /கேது/சனி ஆருனா சகவாசம் வச்சிருந்தா சொல்லவே தேவையில்லை.
இன்னாபா இது கெரகம் செரியில்லன்னுதான் கோயிலுக்கு போக சொல்றாய்ங்க .போறம் .நீ என்னமோ இப்படி பேதியாக்கறியேன்னு புலம்ப ஆரம்பிச்சுராதிங்க.

மறுபடி பேட்டரி உதாரணத்தையே எடுத்துக்குவம். கனெக்சன் கரீட்டா இருக்குன்னா நிதானமா சார்ஜ் ஆகும். நிதானமா டிஸ்சார்ஜ் ஆகும்.
கெரகம் கெட்டுப்போனப்போ எக்குத்தப்பா சார்ஜ் ஆகி தொலைக்கும். ஒலகமே டீ ஜெனரேட்டட் . இதுல நீங்க ஓவர் சார்ஜுல இருந்திங்கன்னா டீம் லீடர் கோயான் இன்சல்ட் பண்ணான்னு ராஜினாமா பண்ணிட்டு அல்லாடுவிங்க. (டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் -கெரகம் கெட்டு போனா நடக்கிறது இதான் -செவ் கெட்டிருந்தா வீரம் அதிகமா இருக்கும்,சூரியன் கெட்டிருந்தா ஈகோ அதிகமா இருக்கும்)

மத்த கெரகம் செரியில்லின்னா கோவிலுக்கு போங்க. எக்கு தப்பா சார்ஜ் ஆனது டிஸ் சார்ஜ் ஆகி நெல்லது நடக்கும்.

ஆனால் குரு செரியில்லின்னா மட்டும் அம்பேல் ஆயிருங்க. கோவிலுக்கு போறதே ஆப்புன்னா கமிட்டியில மெம்பரா இருக்கிறது -அபிசேகம் -பூர்ண கும்ப மரியாதை -யானை கிட்டே மாலை இதெல்லாம் பெரிய ஆப்பா ஆயிரும்.டேக் கேர்.

முக்கியமா பஜனை மண்டலி /திருவிழா சமயத்துல வாலண்டியரா இருக்கேங்கறதுல்லாம் நெருப்போட விளையாடற மாதிரி.
அதே சமயம் குரு+கேது சேர்க்கை இருந்தா தியானம் பண்ணுங்க. குரு+ராகு சேர்க்கை இருந்தா வீட்டோட இருந்து துர்கையை தியானம் பண்ணுங்க. குரு+சனி சேர்க்கை இருந்தா கொல தெய்வத்தை தியானம் பண்ணுங்க.

கோயில் நோட்டீஸ்ல பேரை போடறது /பேனர் வைக்கிறதுல்லாம் வேண்டாம் வாத்யாரே. குரு செரியில்லையா?
நலம்.ஃபைனான்ஸ்/ என்டோன்மென்ட் போர்ட்/ நீதி/ஆசிரியதுறைகளில் இருந்தால் சீக்கிரமே கழண்டு கொள்வது நல்லது
.
பிராமணர்கள்,பூணூல் அணியும் வகுப்பினர்,அரசு அலுவலர்கள், நீதித்துறை,அரசியல்வாதிகள் ஆகியோரிடம் எச்சரிக்கை தேவை.
இருக்கும் தங்க நகைகள் அனைத்தையும் காசாக்கி -வந்த பணத்தை கரண்ட் அக்கவுண்ட்ல போட்டுருங்க.

வயிறு-இதயம் தொடர்பான விஷயங்களில் ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க.ப்ரிக்காஷன்ஸ் எடுத்துக்கோங்க.
கல்யாணம்,திருமண வாழ்வு ,குழந்தை பிறப்புக்கு டாப் பிரியாரிட்டி கொடுங்க .பணம் பண்ண துடிக்காதிங்க. (தப்பித்தவறி சக்ஸஸ் ஆயிருச்சுன்னா முன் சொன்னதெல்லாம் புடுங்கிக்கும்)

கையில் காசு ரூ.30 க்கு மேல் வச்சுக்கப்படாது .கோவில் குளம்,யாகம்/ஹோமம்,சுப காரியம்லாம் போகப்படாது
எளிமையான லைஃப் ப்ளான் பண்ணுங்க. பொஞ்சாதி/கொளந்தைகளையும் கன்வின்ஸ் பண்ணி இதே ரூட்டுக்கு கொண்டுவாங்க.

முக்கியமா சவுண்டு விடாதிங்க .ஐ மீன் அதிகாரம் பண்ணாதிங்க. அரசு வகை வருமானங்களை டச்சு பண்ணாதிங்க வட்டி ?? விஷம் மாதிரி.ஆளையே காலி பண்ணிரும்.

ஆருக்கும் ஐடியா தராதிங்க/அட்வைஸ் பண்ணாதிங்க. சொந்த பந்தம்/நட்பு வட்டத்துல சாவு நடந்தா போய் வாங்க.
ஓகேவா .. அடுத்த பதிவுல பெரியவரை பத்தி சொல்றேன்.அதான் பாஸ் ..சனி பகவான்.