அண்ணே வணக்கம்ணே !
ஆங்கில புத்தாண்டுக்கு தமிழ் மாசம் கூட பிறக்கிறதில்லை. ஐ மீன் சூரியன் கூட ராசி மாறுவதில்லை.ஆனாலும் என்னமோ மாறிப்போச்சுன்னு என்னென்னமோ பண்றாய்ங்க. நாமளும் ட்ரென்ட்ல இருந்தாகனும்ல? அதனால முதற்கண் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லீட்டு பதிவுக்கு போறேன்.
நம்ம பாஸ்..அதாங்க ஆஞ்சனேயரை பார்த்து ஆரோ இன்னைக்கு என்ன திதி என்ன நட்சத்திரம்னு கேட்டாய்ங்களாம் அதுக்கு அவரு எனக்கு ராம நாமம் ஒன்னை தவிர வேற ஏதும் தெரியாது போய்யான்னிட்டாராம். அந்த ரேஞ்சுக்கு போன பிறவு எண் கணிதம் என்ன, கிரக ஸ்திதிகள் கூட ஒன்னும் செய்யாது.
ஆனால் நம்மை பொருத்தவரை சொந்த வாழ்க்கையில வீடு,வாசல்,வண்டி ,வாகனம்னு லோகாயத லட்சியங்கள் ஏதும் இல்லின்னாலும் – நாட்டை பொருத்தவரை ஒரு சபலம் இருக்கு. எல்லாத்தையும் சரி பண்ணிரனும். சனத்துக்கு லோகாய வாழ்க்கையில சிக்கல்களே இருக்க கூடாது. அப்பம் அல்லாரும் ஆன்மீகத்துக்கு திரும்பிருவாய்ங்க. கு.பட்சம் மெஜாரிட்டி ஆஃப் தி பீப்புள் மாறிருவாய்ங்க. சில அப் நார்மல் பீயிங்ஸ் கொஞ்சம் முரண்டு பிடிப்பாய்ங்க. ஆனால் அவிகளும் பெருசா சிரமப்படவேண்டி இருக்காது. காத்து வாக்குல -ஆத்தோட போறாப்ல போயி ஆன்மீக கரையை சேர்ந்துரலாம். அட்மாஸ்ஃபியர் மாதிரி நூஸ்ஃபியர்னு ஒன்னிருக்குல்ல அது சப்ஜாடா மாறீரும்.
நம்ம லோகாயதம்னா நாலு பேரு நம்மை நம்பிக்கையா தேடி வந்து – நல்லது கெட்டது கேட்டு தெரிஞ்சுக்கிட்டு – வாழ்க்கையில முன்னேறி போயிட்டே இருக்கனும் – அவிக கொடுக்கிற சில்லறையில நாம ஏதும் கைமாத்து, கடன், பசி பட்டினி இல்லாம கவுரதையா காலத்தை ஓட்டிரனும் அதுவே யதேஷ்டம்.
இப்படி அப்பாவித்தனமா -அம்புலிமாமாத்தனமா வாழறதாலயோ என்னமோ ஒரு மாதிரியா வண்டி ஓடிக்கிட்டிருக்கு.இது எல்லாருக்கும் சாத்தியமான்னா இன்னைக்கிருக்கிற நிலையில நிச்சயமா சாத்தியமில்லை.
நம்ம ஆப்பரேஷன் இந்தியா 2000 நடை முறைக்கு வந்து -நதிகள் இணைக்கப்பட்டு -கூட்டுறவு பண்ணைவிவசாயம் இம்ப்லிமென்ட் ஆயிருச்சுன்னா ஒரு வேளை சாத்தியமாகலாம். இது சாத்தியப்படனும்னா ஸ்கில் இந்தியா அமலாகனும். இதெல்லாம் நடக்கற காரியமா? தெரியல.
என்னை பொருத்தவரை இந்த நிலைமைலயும் சனம் ஸ்தூல வாழ்க்கைக்காக ஒரு பத்துவருசம் கரெக்டா ப்ளான் பண்ணி உலகத்தோட ஒத்து வாழ்ந்தா போதும் செட்டிலாயிரலாம். பிறவாச்சும் மனசுக்கு பிடிச்சதை (மட்டும்) செய்துக்கிட்டு தேடுதலோட நல்ல வாழ்க்கைய வாழலாம் .அது என்னமோ தெரியல.சனத்துக்கு சலிப்பே வரமாட்டேங்குது.
இந்த கேடு கெட்ட நிலையில திதி,வாரம்,நட்சத்திரம்,கரணம்,யோகம்,ஜாதகம்,கோசாரம்,எண் கணிதம் எல்லாமே ஃபுட் பால் கணக்கா நம்மை அடிச்சு விளையாடிக்கிட்டே தான் இருக்கும்.
மொதல்ல 2014 ஐ எடுத்துக்குவம். கூட்டினா 7 வருது.ஏழுன்னா கேது. வாழ்க்கையே பாம்பு புத்தண்டை தலை வச்சு படுத்த கணக்கா ஆயிரனும் (மோதி ஆட்சி இப்படித்தான் போயிட்டிருக்கு) பாம்பு எப்ப வெளியவருமோ கொத்திருமோன்னே காலத்தை ஓட்டிட்டம். ஏழுன்னா கண்ணாலம்,காட்சி இல்லாத “சன்யாசி”னு அருத்தம். கேது வெளி நாடுகளை காட்டும். மோதி சாப் அப்பப்போ இந்தியா வந்து போறாரு அவ்ளதான். கேது நிம்மதியற்ற தன்மை,பாதுகாப்பற்ற தன்மையை காட்டும் கிரகம். ( நாட்டு நிலைமையும் அப்படித்தான் இருக்கு)
செரி 2015 எப்படி இருக்கும்னு கேட்பிங்க.சொல்றேன். இதை கூட்டினா 8 வருது .இது சனி காரகம். சனி கர்மகாரகன். நாம பண்ண கர்மங்களுக்கெல்லாம் (பாவ செயல்கள்) பலனை கொடுப்பவர். அய்யோன்னாலும் அம்மான்னாலும் விடமாட்டாரு.
அதுவும் எப்பூடி? அவனுக்கு அதை செய்தம் -அதனால இது நமக்கு நடந்திருக்குன்னு நீங்களே டாலி பண்ணிக்கிற அளவுக்கு பலனை கொடுப்பாரு.
உப்பை தின்னவுகல்லாம் தண்ணி குடிச்சே ஆகனும். தப்பு பண்ணவிகல்லாம் தண்டனை அனுபவிச்சே ஆகனும்.நீண்ட காலமா நிலுவையில் இருந்த லாங் டெர்ம் ப்ராஜக்ட்ஸ் துவங்கி வேகமா நடக்கும். சந்தடி சாக்குல நதிகள் இணைப்பு திட்டத்தை கூட தூசு தட்டலாம்.
உழைப்பாளிகள் உழைப்புக்கேற்ற பலனை பெறுவர். ஆனா சனி விருச்சிகத்துல இருக்கிறதால போராட்டம்,துப்பாக்கிச்சூடு ,வன்முறை இத்யாதிக்கு பிறகு தான் இந்த பலன் கியைக்கும்.
ச்சொம்மா ஃபோட்டோவுக்கு ஃபோஸ் கொடுத்து ,கேமராவ பார்த்து சிரிக்கிறவுகளுக்கு டங்குவார் அந்துரும். அப்பு கமல் மாதிரி ஸ்கேட்டிங் பண்ண வேண்டி கூட வரலாம்.
விவசாயம், தொழில் துறை ஐரன்,ஸ்டீல்,ஆயில்,கிரானைட்ஸ்லாம் சனி காரகம் தான்.ஒளுங்கு மருவாதியா வெட்டிப்பேச்சை எல்லாம் விட்டுட்டு இந்த மேட்டர்ல கவனம் செலுத்தினா அல்லாருக்கும் நல்லது. இல்லின்னா நமக்கு ஏன் பொல்லாப்பு. அம்பேல்