ரஜினி : ஒரு ஜோதிட ஆய்வு

தெலுங்குல கீடெஞ்சி மேலெஞ்சுனு ஒரு சொலவடை இருக்கு. அதாவது ஒரு காரியத்தை செய்யறதுக்கு மிந்தி இதனால என்னெல்லாம் கெடுதல் நடக்கும்னு எண்ணி பார்க்கிறது. இது யாருக்கு உபயோகமோ இல்லையோ ஜோதிடருக்கு ரெம்ப யூஸ் ஃபுல். இந்த உருப்படாத ஜாதகத்தை பத்தி எழுதினால் என்ன நடக்கும்னு சின்னதா கணக்கு போட்டு பார்த்துட்டுதேன் தகிரியமா எழுதறேன்.( எல்லாத்தயும் ஆத்தாளே பார்த்துப்பான்னு ஒரு நினைப்பு)

ஜனனம்: 12/12/1950 நட்சத்திரம்: திருஓணம் ராசி: மகரம் ,லக்னம் : சிம்மம்.முதல்ல கிரக நிலைய பார்ப்போம்:
2 ஆவது இடத்துல கேது சனி, நாலாவது இடத்துல சூரியன், அஞ்சுல சுக்கிர புதன், ஆறுல சந்திரன்,செவ்வாய், 7ல குரு, எட்டுல ராகு

அல்லாரும் இவர் ஜாதகத்துல ஹைலைட் பண்ற மேட்டர் காலசர்ப்பதோஷம்.(எல்லா கிரகமும் ராகு கேதுக்களுக்கிடையில சிக்கியிருக்கிறது) இந்த தோஷத்துல உள்ள ப்யூட்டி என்னன்னா ராகு கேதுவோட வேற எதாச்சும் கிரகம் சேர்ந்தா அது பங்கமாயிரும். இல்லாட்டி 45 வயசு வரை பிச்சைதான்.

சிம்ம லக்னம்னாலே ஆகா ஓகோ தானா:
ஒரு பையன் பத்தாங்கிளாஸ் படிச்சு தேறனும்னா அல்லா சப்ஜெக்டுலயும் 35 மார்க் வாங்கனும்.அப்பத்தான் அவன் பாஸு.இல்லாட்டி டப்பாஸு. ஒரே ஒரு சப்ஜெக்டுல நூத்து பதினாறு வாங்கிட்டு ( நாம கணக்குல கொஞ்சம் வீக்குங்கண்ணா -என்ன நூறுக்கு மேல மார்க்கே கிடையாதா ? அதுசரி ) என்னை பாஸாக்குன்னா டப்பாசாக்கலாம் அவ்ளதான்.

அந்த மாதிரி தான் ஒரு பாயிண்டை எடுத்துக்கிட்டு அனலைஸ் பண்றதும். சிம்ம லக்னம்னா என்ன கொம்பா? நம்மாளுங்க (ரிஷிகள் -மகரிஷிகள்) குமுதங்காரன் போடறானே சம்பந்தா சம்பந்தமில்லாத டொபனேர் தனமான படங்களை அப்படி அவிக ராசிக்கான உருவத்தை உருவாக்கலை.அதுல ஆயிரம் அர்த்தம், உள்ளர்த்தமெல்லாம் இருக்கு.

ஆண் சிங்கம் சோம்பேறி. கில்மால வேணம்னா ஜூரியா இருக்கலாம். ஆனால் பெண் சிங்கம்தான் வேட்டைக்கு போகும். ஆண் சிங்கம் குழந்தை குட்டிய பார்த்துக்கிட்டு வர்ர ஃபோனை அட்டெண்ட் பண்ணிக்கிட்டு குகையோட கிடக்கும்.

இதுலர்ந்து என்ன புரியுது? ஆண்கள் சிம்ம லக்னத்துலயோ,ராசிலயோ பிறந்தா பெருசா பயனில்லே. கலைஞரை விதவையாக்கின அதே அமைப்பு இவர் ஜாதகத்துல கூட கீது பாருங்க.

ரெண்டுல கேது – எட்டுல ராகு.

ரெண்டுல கேது இருக்கிறதாலதான் தத்துவங்கற பேர்ல தத்து பித்துன்னு உளறி என் போன்றவர்கள் கிட்ட கூட வாங்கி கட்டிக்கிறாரு. சொன்ன சொல்லு ஒன்னு கூட நிறைவேர்ரதில்லை. (லேட்டஸ்ட்: மகள் திருமணத்துக்கு ரசிகர்களுக்கு விருந்து) பாபா படம் ஊத்திக்கவும் இது தான் காரணம்.( கேது மீன்ஸ் சன்னியாசி -பாபாவுல சன்னியாசிகளோட டீல் பண்றாருல்லை – மகா அவதார் பாபாவும் ஒரு சன்னியாசிதானே)

ரெண்டு தனபாவம். இங்கன ராகு. ராகுன்னாலே திருட்டு தான்.ப்ளாக் மணி தான். சமீபத்துல தெஹல்கா விட்ட லிஸ்ட்ல அய்யா பேரு கூட கீதாமே நெஜமாலுமா? நிஜமே சொன்னாலும் பொய்யா போயிரும். தான் பேசினதை தானே மாத்தி பேசவேண்டி வரும்.

ஒரு சமயம் ஜெ ஆட்சி தொடர்ந்தா தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்தமுடியாதுனு கர்ஜனை. மறு சமயம் பார்த்தா வீரலட்சுமி ,தீர லட்சுமின்னு அர்ச்சனை. இதெல்லாம் கேது பண்ற லொள்ளுதேன்.

ஆந்திரால வந்தா ஏ என் ஆர்,என்.டி.ஆர், தமிழ் நாட்ல இருந்தா எம்சியார் ,சிவாஜி, கர்னாடகா போனா அங்கன வெற சால்ரா.

மேலும் இதை கத்திரியோகம்ங்கறாய்ங்க. இது தனிமைப்படுத்திரும். (ரசிகர்கள் கிட்டருந்து -மக்கள் கிட்டருந்து -சக சினிமாக்காரர்கள் கிட்டருந்து -அட குடும்பத்துல கூட பார்ட்டி தனி தானே-அப்பப்ப தானே மரியாதையா கட் பண்ணிக்கிட்டு நாடோடி மாதிரி போயிட்டுதானே வராரு)

இது மட்டுமில்லிங்கண்ணா ஒரு காலத்து ஜரிதா, போதை பழக்கம் எல்லாத்துக்கும் இந்த ராகு கேதுவோட ஸ்திதிதான் காரணம்.

இந்த அமைப்பு ஃபுட்பாய்சனிங், மர்ம சாவு, விடமருந்தி சாவு, பாம்பு கடித்து சாவு,மெடிக்கல் அலர்ஜி, அன் வாரன்டட் மோஷன்ஸ், வாமிட்டிங்சுக்கும் காரகமாகுது.

6-7 க்கு அதிபதியான சனியோட வேற சேர்ந்தாரு. 7ன்னா மனைவி . 7ஆவது இடத்துல பிராமண கிரகமான குரு நின்னதால பிராமண குலத்தோன்றலான லதா மனைவியானார். ஆனால் அவரோட பாப் விதேசியத்தை காட்டுது ( அப்பாடா கேதுவுக்கு பரிகாரம்) ஆனால் இவரோட லக்னதுக்கு குரு டபுள் ஆக்ட் . மரணத்தை தரவேண்டியதும் இவரே. பெரும்புகழை தரவேண்டியதும் இவரே.இவர் மனைவிய காட்டற இடத்துல நின்னதால வீட்டம்மானால அப்பப்போ சிக்கல்ல மாட்டிக்கிறாரு.

ரஜினி 25 விழா ஞா இருக்குங்களா? சமீபத்துல பிராமண சம்பிரதாயங்களோட கண்ணாலம். (இவரை வளர்த்துவிட்டது மாத்திரம் சேரிக்காரன்- கிண்டலடிச்சவுக அவாள் – ஆனால் அய்யா அவாளோட சாங்கியங்களை தலை மேல சுமந்தார் )

நம்மாளை ஆராச்சும் கிண்டலடிச்சா ஒடனே அவிகளுக்கு கேடு காலம் ஆரம்பிச்சுரும் . ஒரு தாட்டி இப்படித்தான் மனோரமா மாட்டினாய்ங்க. 6ன்னா எதிரி. ஆறுக்கதிபதியோட கேது சேர்ந்ததால இந்த கதி.

அப்ப உங்க கதியும் அதேவானு கேப்பிக. சொல்றேன். கேதுன்னா சன்னியாசி. சன்னியாசிய நம்ம சனம் சாமினு தான் கூப்பிடறாய்ங்க. அதிர்ஷ்டவசமா நமக்கும் அந்த டைட்டில் உண்டுங்கோ.

மேலும் நான் பிறந்த தேதிலயே 786 வருது. நான் பாதி பாய். கேதுன்னா அதான். மேலும் நமக்கு பூனைக்கண். பப்பு வேகாதுங்கோ..

கடன் கொடுத்தவனும் நாஸ்திதேன். அவரோட வாரிசுக்கு கடன் கொடுத்துட்டு அய்யா உதிர்ப்பாருன்னு பார்த்து பார்த்து ஜப்தி வாரண்டெல்லாம் கொண்டாந்தாங்களாமே. சனி என்றால் நெர்வஸ் செட் அப் கேதுன்னா பிரச்சினை. ரோகாதிபதியோட கேது சேர்ந்து 2 ல நின்னதால பெரும்பண செலவுடன் சிகிச்சை -சிகிச்சைக்கு பின் குணம்.

சூரியன் 4 ல்:
உலகை விழிக்க வைப்பது சூரியன். மனுசன் தூங்கி ரிலாக்ஸ் ஆறது வீட்ல. வீட்டை காட்டற இடத்துல சூரியன். இதுல என்னாத்த ரிலாக்ஸ் ஆறது ? என்னாத்த ரோசிக்கறது ? என்னாத்த தியானம் பண்றது?

4ங்கறது நிலம், நீச்சையெல்லாம் கூட காட்டுது. வழக்கமா நம்மாளு லேண்ட் ஓனருக்கு பணம் பட்டுவாடா பண்ணமாட்டாரு. ரோட்டுல போறவனுக்கு கொடுத்திருவாரு.ஓனர் கோர்ட்டுக்கு போவான். இதுக்கு இந்த அமைப்புத்தேன் காரணம்.

4ங்கறது வித்யாஸ்தானம். சூரியன் ஆத்ம காரகன். இதனாலதான் இவரு தியானம்,யோகம்னு “மலை மலையா”ஏறி இறங்கறாரு. ( மலைக்கு சூரியன் தேன் காரகம்)

ஐந்தில் புத சுக்கிரன்:

அஞ்சுங்கறது புத்தி ஸ்தானம். இங்கன ஆரு இருக்கா தன,லாபாதிபதியான புதன். ஆக இவர் புத்தி எல்லாம் தன் வருமானத்தை லாபத்தை உசத்திக்கிறதுல தான் மையங்கொண்டிருக்கும். 2ன்னா குடும்பம். இவர் சிந்தனை சதா தன் குடும்பத்தை தான் வட்டமிடும்.

மேலும் புதன் வியாபாரகாரகன். வைசியன். நம்மாளு சரியான வியாபாரிங்கோ. (புதனுக்கு இன்னொரு காரகத்வமும் உண்டு : அது வேசி) ஒரு வேசி எப்படி தன் க்ளையண்டை டீல் பண்ணுவாளோ அப்படி இவர் சனத்தை டீல் பண்ணுவாரு. மொத்தத்துல யூஸ் அண்ட் த்ரோ.

அப்பாறம் இங்கன சுக்கிரனும் கீறாரு. இவரு தைர்ய ஸ்தானாதிபதி . இவரோட தகிரியம்லாம் ஏவிஎம்மோட முடிஞ்சுரும்ங்கண்ணா. சுக்கிரனுக்கு ஜீவனஸ்தானாதிபத்தியமும் கிடைச்சிருக்கு அதனாலதான் கலைத்துறைல குப்பை கொட்டறாரு.

அதே நேரத்துல சுபகிரகமான சுக்கிரனுக்கு கேந்திராதிபத்யம் கிடைச்சது. இதுக்கு மின்னே லதா மேடத்தை ( எம்.சியார் காலத்து லதாங்கண்ணா) ட்ரை பண்ணி நாறினாருன்னு கூட அப்பத்துல சேதி வந்ததே அது நிஜமா இருந்தா அதுக்கு இந்த கிரகஸ்திதிதான் காரணம்.

ஆறில் செவ் சந்திரன்:

4,9க்கு அதிபதியான செவ் உச்சம் பெற்றார். 9ன்னா அப்பா, செவ்வான்னா போலீஸ். ( கணக்கு சரியா போச்சா) செவ்வாயோட சந்திரன் சேர்ந்ததால ( அதுவும் விரயாதிபதி) தாய்,வீடு,வாகனம்,கல்வி, அப்பா,அப்பாவழி சொத்து எல்லாத்துக்கும் ஆப்பு. ஆனாலும் செவ் உச்சம் பெற்றதால மனோகாரகனான சந்திரன் அவரோட சேர்ந்ததால லாபம் இருக்கோ இல்லியோ – மெட்டீரியலைஸ் ஆகுதோ இல்லியோ இவரோட மனம் சதா தாய், வீடு,வாகனம், நிலம், நீச்சு, தன் சகோதரர்கள் மேலயே வட்டமிட்டுக்கிட்டு இருக்கும். இந்த வகையறாவில் பகிர்ந்துக்க முடியாத மனத்துயர் இருக்கும்.

செவ் எதிரிக்கு காரகன். 6 எதிரிகளை காட்டுமிடம். இங்க இவர் உச்சம் பெற்றார். இதனாலதான் செவ் காரகம் வகிக்கும் வன்னியர் தலைவரான ராமதாஸ் கிட்டே பல்பு வாங்கினாரு.

இங்கன செவ் மட்டும் இருந்திருந்தா அரசியல் கட்சி என்ன மிலிடெண்ட் போராட்டமே நடத்தியிருப்பாரு. சந்திரன் சேர்ந்து செவ்வாயோட சூட்டை ஒன்னுமில்லாம பண்ணிட்டாரு. செவ் 8 ஆம் பார்வையா லக்னத்தை பார்க்கிறதால தான் இவருக்கு கௌமார ஸவரூபம் கன்டின்யூ ஆகுது.

7 ல் குரு:
ஆர்.எம். வீரப்பன், அம்ப்ரீஷ் மாதிரி பார்ட்டிகளோட டச் ஏற்பட இதான் காரணம். அவிக மொக்கையாகி போகவும் இதான் காரணம். குருவுக்கு அட்டமாதிபத்யமும் இருக்கே. ( கலைஞர் தோத்தா அதுக்கு ரஜினியோட சகவாசமும் ஒரு காரணம்)

இத்தீனி ஓட்டைகளை வச்சுக்கிட்டு – இவர் எங்கன அரசியலுக்கு வர்ரது . தப்பித்தவறி வந்தா இத்தனை நாள் சேர்த்த பணமெல்லாம் சூதாட்டத்துல சேர்த்தமாதிரி நில் பேலன்ஸுக்கு வந்துருங்கண்ணா.

கோசாரப்படி பார்த்தா சனி 9ல ( படம் நடிச்ச காசே வர்ரது கஷ்டம் – யந்திரனுக்கு வாங்கியாச்சா) அப்படியே சனி 10க்கு வந்தாலும் “பொழப்ப” பார்க்க போயிருவாரு. ( 12/12/2012)

குரு மே 8 வரை 3 ல (அரசியல்னாலே பே.. சாரி பீதி கிளம்பும்) அப்படியே நாலுக்கு வந்தாலும் குடும்ப கலகத்தை டீல் பண்ணவே சரியா போயிரும்.

மே 16 க்கு அப்பாறம் கேது அஞ்சுல ராகு 11 ல . ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து சில்லறை அள்ளுவார். கூடவே பயங்கர அவப்பேர் வரும். வாரிசுகள்/அவர்களின் வாரிசுகள் மேட்டர்ல சோகப்பட்வேண்டி வரலாம்.

2007 முதல் 2009 வரை அஷ்டமசனியெல்லாம் தாண்டி 2009 செப் 9 முதல்தான் ஏதோ “ஒரு மாறியா” போய்க்கினு கீது. அரசியலாவது மண்ணாவது..