செவ் தோஷம் -பலான பிரச்சினைகள் (பெண்) 4

அண்ணே வணக்கம்ணே !

செவ் தோஷத்தை பொறுத்தவரை ஆண்,பெண்கள் விஷயத்துல எப்படி வேலை செய்யுதுன்னு சமீப காலமா பார்த்துக்கிட்டிருக்கோம். செவ்வாய்க்கும் – மாதவிலக்கு சக்கரத்துக்கும் ; மா.வி.சக்கரத்துக்கும் – பெண்களின் செக்ஸ் உணர்வுகளுக்கும் உள்ள தொடர்பை கோடி காட்டியிருந்தேன்.

தோஷமுள்ளவர் -தோஷமில்லாதவர் இணையும் போது பிரச்சினைகள் வரும். தோஷமுள்ளவர்களையே சேர்த்து வைக்கும் போது தோஷமில்லாதவுக சேஃப் ஆயிருவாய்ங்களே கண்டி தோஷமுள்ளவர்களுக்கு ஒரு இழவு நன்மையும் இல்லைன்னும் சொல்லியிருந்தேன்.

செவ்வாயின் முக்கிய காரகமான கோபத்தை பற்றி பார்ப்போம். கோபங்கறதே பலவீனத்தின் வெளிப்பாடு.உடலில் போதுமான ரத்தம், அந்த ரத்தம் சுத்திகரிக்க படுவதில் பிரச்சினை இல்லாமை, ரத்தத்தில் இருக்கவேண்டிய மேட்டருல்லாம் நார்மலா இருக்கிறது ,ரத்த ஓட்டத்துல பிரச்சினை இல்லாம இருக்கிறது ..இதெல்லாம் தான் மன்சனுக்கு வலிமையை தருது.

வலிமை இருக்கும்போது எல்லாமே தன் கையில் -தன் கட்டுப்பாட்டில் இருப்பதை போல உணருவோம். வலிமை இல்லாத போது குடி முழுகிப்போனாப்ல டென்ஷன் ஆயிருவம். ஜாதகத்துல செவ் கெட்டா ரத்தம் கெடும் -ரத்தம் கெட்டா வலிமை குன்றும். வலிமை குன்றினால் கோபம் வரும்.

புருசங்காரன் பொஞ்சாதி மேல கோவத்தை காட்டினா என்ன ஆகும்? (கமெண்ட் படிவத்தில் பத்துவரிகளில் எழுதவும்)

பொஞ்சாதி புருசன் மேல கோவத்தை காட்டினா என்ன ஆகும்? (பத்துவரிகளில் கமெண்ட் படிவத்தில் எழுதவும்)

கோபம் சாதா சமயத்துல வந்தாலே நாறிரும். இதுல பலான மேட்டர்ல கோபம் வந்தா என்னாகும்? ஏதோ படத்துல காமெடி சீன்.

புருசன் காரன் பயில்வான். குஸ்தில ஜெயிச்சு கப் எல்லாம் வாங்கிட்டு வீட்டுக்கு வரான்.செமை மூடு பொஞ்சாதி மளிகை கடைக்காரனுக்கு பாக்கி,புடவை காரனுக்கு பாக்கின்னு பட்டியல் போட ஃபயில்வான் நொந்து போயிருவாரு.

நிறைய பெண்களுக்கு எதை எப்ப சொல்லோனங்கற சென்ஸே கிடையாது. ஆண்மையின்மை பெருகவும் – இழந்த சக்தி வைத்தியர்கள் கல்லா கட்டவும் இவிகளும் ஒரு முக்கிய காரணம்.

பலான மேட்டர்ல போயி எப்டி கோபம் வரும்னு கேப்பிக .. சின்ன மேட்டரு கிள்ளலோ ,கடியோ கொஞ்சம் பலமானாலே போதும் . சிலது எரிஞ்சு விழும். இவனுக்கு சப்த நாடியும் ஒடுங்கி போயிரும். இது சில்லி மேட்டரு.

நிறைய ஆண்களுக்கு துரித ஸ்கலிதம் (ப்ரிமெச்சூர்ட் எஜாகுலேஷன் ) பெரிய பிரச்சினை. இதுக்கு ஆயிரத்தெட்டு காரணம் இருக்கு. இந்த மேட்டர்ல பெண் தான் கோச் மாதிரி. புருசங்காரன் டெப்ரஸ் ஆகும் போது போவட்டும் விடுங்க மாமா ! காஞ்ச மாடு கம்பங்கொல்லையில பாய்ஞ்ச மாதிரி பாய்ஞ்சா இப்படித்தான் ஆவும். மேலும் உங்களுக்கு என் மேல எம்பூட்டு ஆசைங்கறதை தான் இது காட்டுதுன்னுஆறுதலா பேசினாலே போதும். பார்ட்டி நின்னு விளையாட ஆரம்பிச்சுருவான்.

ஆனால் ஜாதகத்துல செவ் கெட்டிருந்தா இந்த மாதிரி ஆறுதல் வசனம்லாம் வராது. “இந்த இழவுக்கு தான் வரமாட்டேங்கறது” மாதிரி பேச்சு எழுந்தாலோ – அல்லது பாத்ரூமுக்கு எந்திரிச்சு போகும் போதே கதவு தாழ்ப்பாளை சத்தமா திறந்து “டமார்”னு கதவை சாத்திட்டு போனாலோ .. அந்த நேரம் புருசன் அடக்கி வாசிச்சாலும் – விடிஞ்ச பிறவு?

மேலும் ஏற்கெனவே சொன்னதை போல கோபம் -பயம் மாதிரி உணர்வுகள் செக்ஸ் உணர்வுகளை (எதிராளியின் உணர்வுகளை மட்டுமல்ல தன் உணர்வுகளையும்) கொஞ்சம் கொஞ்சமா கொலை பண்ணிரும். இதுமட்டுமில்லை பாடியோட பயோ கெமிஸ்ட்ரியே மாறிரும். ஹார்மோன்ஸோட சுரப்புல மாறுதல் வந்துரும்.

ஆணாயிருந்தா விந்து உற்பத்தியிலயும் – விறைப்பு மேட்டர்லயும் ,பெண்ணா இருந்தா மா.வி சக்கரத்துலயும் -செக்ஸ் உணர்வுகளிலும் – பால் உறுப்பின் தோற்றம் – மாற்றத்துலயும் கூட மாறுதல் வந்துரும்.

இந்த இழவுல பலான மேட்டர்லயே கோபம் கோட்டை கட்டி உட்கார்ந்தா தாம்பத்யத்துக்கு சமாதிதான்.
செவ்வாய் எந்தெந்த இடத்துல இருந்தா என்னென்ன பிரச்சினைன்னு பார்த்துக்கிட்டு வந்தம் .சீரிஸ் எங்கயோ விடுபட்டு போச்சு அடுத்த பதிவுல சரி பண்ணிரலாம்.

உடுங்க ஜூட்டு.