2015 குரு பெயர்ச்சி பலன் :தனுசு

Brammangaru

அண்ணே வணக்கம்ணே !
நம்ம லக்னத்துக்கு அஞ்சுல சரி ஜரூரா வேலை செய்றாரு.வேந்தர் டிவியின் மூன்றாவது கண் நிகழ்ச்சிக்காக பேட்டி+ பிரம்மங்காரு ஜீவ சமாதி விசிட்டின் போது ஒரு ஹேர் கட் இல்லை/ட்ரிம்மிங்கில்லை ,ஃபேஷியல் இல்லை. நாய் பொளப்பு .

நீண்ட நெடும்பயணம் . சாப்பாட்ல காரத்தை தவிர வேறில்லை. மோர் மட்டும் ஒன் மோர் கேட்க வேண்டியதாயிருச்சு . இந்த குரு பெயர்ச்சி பலன் கூட இழுக்குது. வீடியோ பதிவு கண்ணா மூச்சி காட்டுது .பார்ப்பம் .

இன்னைக்கு தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன் தந்திருக்கன் .சாரி ஃபார் தி டிலே !
குரு பெயர்ச்சி பலன் சொல்லும் போது தனுசு, மீன ராசி –சனி பெயர்ச்சி பலன் சொல்லும் போது மகர,கும்ப ராசி களுக்கு பலன் சொல்லும் போது அலார்ட்டா சொல்லனும் .ஏன்னா தனுசு மீன ராசிக்கு குரு ராசியாதிபதி , மகர,கும்ப ராசிக்கு சனி ராசியாதிபதி .

தனுசு ராசிக்கு இவரு 1- 4 க்குடையவர் . இவர் போன ஒரு வருசம் எட்டுல இருந்தாரு. மத்த ராசிக்காரவிகளுக்கு குரு எட்டுல வந்தா உடல் நிலை +பொருளாதார நிலை ரெண்டுமே பல்பு வாங்கிரும். ஆனால் தனுசு ராசிக்காரவிகளுக்கு உடல் நிலை அல்லது பொருளாதார நிலை ரெண்டுல ஒன்னு தான் பல்பு வாங்கும். அதுவும் உடல் உழைப்புக்கு அஞ்சாத பார்ட்டி -ஹார்ட் ஒர்க்கர்னா ரெண்டுமே இல்லாம கூட எஸ் ஆகலாம். தாய்,வீடு,வாகனம்லாம் கூட பல்பு கொடுத்திருக்கும்.

செரி பாஸ்ட் ஈ பாஸ்ட் ..இனி என்ன ? அதை பார்ப்பம்.

இப்போ அஷ்டமத்துல இருந்த குரு 2015,ஜூலை ,14 ஆம் தேதி விடியல் 5.45 மணிக்கு (கடகத்தில் இருந்து சிம்மத்துக்கு) ஒன்பதுக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு அஷ்டமத்துலருந்து விலகறதே ஒரு பாக்கியம். அதுவும் பாக்யத்துக்கு வராருன்னா டபுள் தமாக்கா தான்.

எட்டுலருந்து விலகறதால நோய்,நொடி,நோக்காடு,வறுமை ,வீண் பழி நீங்கும். ஒன்பதுக்கு வர்ரதால அப்பா,அப்பா வழி உறவுகளோட உதவி கிடைக்கும்.பூர்வீக சொத்து,உங்க முதலீடு,சேமிப்பு கை கொடுக்கும்.தூர தேச தொடர்புகளால திருப்பம் ஏற்படும், இது மட்டுமா? தாய்,வீடு,வாகன வகையில இருந்த சிக்கலும் விலகும். மாணவர்கள் தூர தேசம் போய் கல்வி பயிலவும் வாய்ப்பு கிடைக்கும்.

2015, ஆகஸ்ட் 10 முதல் செப் 9 வரை குரு அஸ்தமிக்கிறார் (அதாவது குரு பிரபாவம் ஜீரோவாகி சூரிய பிரபாவம் உச்சத்துக்கு போகும்) .சூரியன் பாக்யாதிபதிங்கறதால சொந்த முயற்சில ரிமோட் வில்லேஜ், நியூலி டெவலப்பிங் ஏரியா ,மலை பகுதியில ஒரு சொத்தே கூட வாங்குவிக .அடகு வச்சிருந்ததை ரிலீஸ் பண்ணுவிக. லோக்கல் பாலிட்டிக்ஸ்ல உள்ளவிகளுக்கு முக்கியத்வம் கூடும். நகராட்சி,பஞ்சாயத்து காண்ட் ராக்டருன்னா சொல்லவே தேவையில்லை.

2016,ஜனவரி 8 முதல் சிம்மத்துலயே வக்ரமாகிறார் (மார்ச் 15 வரை இதே நிலை -அடுத்த பஞ்சாங்கம் வந்தாதான் எதுவரை வக்ரம்னு சொல்ல முடியும்)
அப்பாவின் ,அப்பா வழி உறவின் போக்கு அதிர்ச்சி தரும். தாய்,தாய் வழி உறவு எரிச்சல் தரும். வாகனம் கடுப்பேத்தும்.மாணவர்கள் ஒரு கல்வியாண்டையே இழக்கவேண்டியும் வரலாம்.வயிறு இதயம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்களுக்கு சோதனை காலம்.