செவ் காரக மனைவியர் –பிரச்சினைகள் –பரிகாரம்

IMG_0027

அண்ணே வணக்கம்ணே !
செவ் காரக மனைவி –பிரச்சினைகள் –பரிகாரம் இதான் இன்னைக்கு பதிவு . உங்க மனைவி எந்த கிரக காரகம்னு தெரிஞ்சுக்கனும்னா பழைய பதிவுகளை தேடி பிடிங்க படிங்க.

செவ் காரக மனைவியால்/மனைவிக்கு வரக்கூடிய பிரச்சினைகள் அனேகம் இருக்கு.

சில உபகதைகளை பார்க்கலாம்.

1.கணவர் சர்க்கரை ஆலை சிப்பந்தி. சமைக்கிறச்ச பொஞ்சாதிக்கு நெருப்பு பிடிச்சுருச்சு. அதை அணைக்க இவர் போயி இவருக்கும் மார், கை எல்லாம் வெந்து போச்சு. பொஞ்சாதி டிக்கெட்டு.இவரு சில பல வருசம் கோர்ட்டுக்கு அலைஞ்சாரு.

2.கணவர் கலைத்துறையை சேர்ந்தவர் .பொஞ்சாதி கிரானிக் அனிமிக் பேஷண்ட். தன் வருமானத்துல 90 சதவீதம் பொஞ்சாதி மெடிக்கல் பில்லுக்கே வச்சாகனும்.

3.கணவன் ஈ.பி சிப்பந்தி. பக்கத்து காம்பவுண்ட்ல இவர் மாமா சிகரட் பிடிச்சா இவரை பிடிச்சு ஏறும் பொஞ்சாதி. மாமங்காரன் லேசா சுதி ஏத்திக்கிட்டு கூவ ஆரம்பிச்சா இவருக்கு சிவராத்திரி. கடேசில சொந்த வீடிருக்க வாடகை வீட்டுக்கு போயி அந்த ஆங்க்சைட்டில இவருக்கு ப்ளட் ஷூகர் வந்து போயே போயிட்டாரு.

4.புது பொஞ்சாதி என்னங்க கியாஸ் லீக் ஆகறாப்ல இருக்கு கேஸ் கம்பெனிக்கு சொல்லி விடுங்கன்னாள். நம்மாளு அதை டீல்ல விட்டுட்டான். சிறு தீ பெருந்தீ ஆகி டைவர்ஸ் வரை போயிருச்சு.

5.ஒரு ஹவுஸ் ஓனர் .தன் வீட்டு கரண்டு பில்லை குடித்தனக்காரவிக தலையில போடறதுல ஜித்தன். ஒன் டே அன்னாருக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி நடந்தது.

இன்னும் ஆயிரமாயிரம் கதை இருக்கு. சுருக்கமா சொன்னா செவ் காரக பெண்ணுக்கு /அந்த பெண்ணால் செவ் காரக பிரச்சினைகள் வரும்.

அதென்ன செவ் காரக பிரச்சினை?

ரத்தம் எரிச்சல்,கோபம்,உஷ்ணம் தொடர்பான பிரச்சினைகள்.

ரத்தம் போதாம இருக்கலாம். (மாத விலக்கு சக்கரம் அவுட் ஆஃப் ஆர்டராயிரும்) அல்லது ரத்தத்துல எதுவோ போதாம இருக்கலாம். (ஹீமோ குளோபின்/ வெள்ளை அணுக்கள்) அடிக்கடி மூக்குல ரத்தம் வரலாம், பைல்ஸ் இருக்கலாம். ப்ளட் ஷூகர், பிபி வரலாம்.

ரத்த சுத்திகரிப்பில் பிரச்சினை இருந்து வீசிங் வரலாம், கட்டி ,கொப்புளம் வரலாம். இதெல்லாம் ரத்தம் தொடர்பானவை .

அல்சர்,பெப்டிக் அல்சர் வரலாம். உள்ளங்கையில் எரிச்சல்,உள்ளங்காலில் எரிச்சல் வரலாம். இதெல்லாம் எரிச்சல் தொடர்பானது.

கோபத்துல தனக்கு தீங்கு விளைவிச்சுக்கலாம், பிறருக்கு தீங்கு விளைவிக்கலாம். வீட்டை விட்டு வெளியேறலாம், மஹிளா ஸ்டேஷனுக்கு போயி ரிப்போர்ட்டு கொடுத்துரலாம். இதெல்லாம் கோபம் தொடர்பானவை.

வீட்ல ஷாக் சர்க்யூட் நடக்கலாம்,தீ விபத்து நடக்கலாம்,வாகனவிபத்துல சிக்கலாம்.

அக்கம்பக்கம் உள்ளவிகளோட வாய் சண்டை கைச்சண்டையாகி போலீஸ் ஸ்டேஷன் வரை போகலாம்.

புருசங்காரனுக்கு தெரியாம தன் அண்ணன் தம்பிகளுக்கு ஏறப்போட்டு அதுல சிக்கல் வரலாம்.

சின்ன வயசு பசங்களோட வெள்ளந்தியாவோ –வில்லங்கமாவோ பழகலாம். அதனால பிரச்சினை வரலாம்.

போலீஸ், மிலிட்டரி,ரயில்வே, ஈபி குடும்பத்தாரோட தகராறு வரலாம்.

புருசங்காரனுக்கு தெரியாம வீட்டுமனைக்கு தவணை கட்டி ஏமாறலாம்.

முணுக்குன்னா கோபம் வந்து தலையை கிரோசின்ல நனைச்சுக்கிட்டு தீ வச்சுக்கலாம்.

அல்லது மணிக்கட்டுல ப்ளேட்ல கீறிக்கலாம். ஆடுமாடு முட்டிரலாம். இப்படி பல பிரச்சினைகள் செவ் காரக மனைவியால் வர வாய்ப்பிருக்கு.

செவ்வாய்னா என்ன நவகிரகத்துல ஒரு கிரகம் அவ்ளதானேன்னிராதிங்க. நம்ம மக்கள் முதல்வர் இருக்காய்ங்க. அவிக ஜாதகத்துல சுக்கிரன் உச்சம். கலைஞர் மாதிரி மானாட மயிலாட ரசிச்சுக்கிட்டு லைஃபை எஞ்ஜாய் பண்ண வேண்டியதுதானே. நெவர்.

அவிக கோபத்துக்கு பயப்படாதவனே கிடையாது. அந்த கோபத்தை தங்களுக்கு சாதகமா பயன் படுத்தி இடை தரகர்களாகி பலரும் சில காலம் ஆதாயமடைஞ்சதையும் நாடு பார்க்குது.

ஏன் இந்த நிலை? அந்தம்மாவுக்கு செவ் 2ல் நின்று (நீசமா) எட்டை பார்க்கிறாரு.

செவ்வாய்க்குரிய கடவுள் முருகன். இவருக்கு இன்னொரு பெயர் குமார சுவாமி. இப்பம் சொ.கு வழக்கை விஜாரிக்கிற ஜட்ஜய்யா பேரும் குமார சுவாமியாம். என்னமோ போங்க.

அட இந்த முருகேசனையே எடுத்துக்கங்க. மம்மியோட ஆள்,அம்பு,படைகளோட ஒப்பிட்டா நாம அவிக கால் தூசுக்கு கூட ஆகமாட்டோம்.

ஆனால் நம்மால ஒரு வில்லங்கம் புதுசா வந்திருக்கு மம்மிக்கு.ஆமாங்ணா நாம கார்டன்,ஜெயில்,மறுபடி கார்டன்னு துரத்தி துரத்தி லெட்டர் போட்டுக்கிட்டிருந்தமா ..எல்லாம் தமிழ் நாட்டோட இழி நிலைய மாத்தற தீர்வுகள் பற்றித்தான்.

ஆரும் கண்டுக்கல. என்ன ஆச்சு? ச்சும்மானாங்காட்டியும் -போது போகட்டுமேன்னு மத்திய அரசுக்கு ஒரு புகாரா அனுப்பினம்.அதை அவிக பர்ஸ்யூ பண்ணி தமிழ் நாடு தலைமை பொறியாளருக்கு அனுப்பியிருக்காய்ங்களாம். ஸ்க்ரீன் ஷாட் கீழே

Modi Vs Lady

மவளோட லோன் மேட்டர்ல இப்டித்தான் புகார் அனுப்பினம் -அது ஏ.பி .சி.எம் செல்லுக்கு வந்ததும் போன் எல்லாம் போட்டு விஜாரிச்சானுவ..
அது ஏதோ பர்சனல் இஷ்யூங்கறதால நாம பெருசா கண்டுக்கல. ஆனால் இது பொது விஷயம் பாஸ் ! கிளிச்சுருவம்ல.

இதுக்கு காரணம் மம்மி ஜாதகத்துல 2 ஆமிடத்துல நின்ன செவ் தான். இவர் தற்சமயம் ராசிக்கு 7 ல். சீக்கிரமே எட்டில் வரப்போறாரு. ஏற்கெனவே ரத்தம் தொடர்பா ஏதும் பிரச்சினை இருந்தா ஒரு ஆட்டு ஆட்டி வச்சிரும்.மம்மி ப்ளீஸ் டேக் கேர் !

மம்மிக்கு நாம அனுப்பின பூரா கன்டென்டும் இங்கே இருக்கு.

ஆருனா புண்ணியாத்மாங்க மானிலகனவுகளை மட்டுமாச்சும் இங்கிலீபீஸுல டப் பண்ணி போட்டா சேஞ்ச் ஆர்க் வெப்சைட்ல ஒரு மனுவா போட்டு நாஸ்தி பண்ணலாம்.

நிற்க கருவுற்றிருந்த என் மகள் வெள்ளியன்று (06/02/2015) இரவு 8.24 மணிக்கு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள் .சுக பிரசவம். தாயும் சேயும் நலம்.
இந்த பதிவுல செவ் காரக மனைவியரால்/மனைவிக்கு வரக்கூடிய பிரச்சினைகளை பார்த்தோம் இதை எல்லாம் ஓரளவுக்கு ஓவர் கம் பண்ணனும்னா என்ன பண்ணனும்? அடுத்த பதிவுல பார்க்கலாம்.